உலகளவில் பிரியாணியை மக்கள் விரும்பி ருசிக்க காரணம் என்ன? கடந்து வந்த பாதை
இன்றைய காலக்கட்டத்தில் பிரியாணி என்றால் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. பிரியாணிக்கு இருக்கும் மவுசு வேறு எந்த உணவுக்கு இருந்ததில்லை என்றே கூட கூறலாம். பிரியாணியில் உள்ள பிளேவர்கள், டெக்ஸ்ச்சர் மற்றும் மசாலா வாசனை இதை தவிர்க்க முடியாத உணவாக மாற்றி விட்டது.
400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் மக்கள் மனதில் ஹைதராபாத் பிரியாணி என்பதாக இணைந்துள்ளது. இன்று பிரியாணி நமது உள்ளூர் உணவாக மாறியிருக்கலாம்.
ஆனால் அது இந்தியாவிற்கு எங்கிருந்து எப்போது வந்தது என்பது பலரும் கேட்க விரும்பும் ஒரு கேள்வி. மேலும், பிரியாணி ஈரானிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது.
ஆனால் பிரியாணியின் மூல வார்த்தையான பிரிஞ் பிரியாண் என்பது பெர்சிய மொழியில்தான் இருக்கிறது. இதன் பொருள் வறுத்த சோறு. ஈரானில் நம்மூரில் தம் பிரியாணி என்று சொல்வது போலவே சமைக்கிறார்கள்.
ஈரானில் விற்கப்படும் பிரியாணியில் அரிசி இல்லை. காகிதத்தை விட மெல்லியதாக இருக்கும் ருமாலி ரொட்டியின் மேலே வேகவைக்கப்பட்ட இறைச்சியை வைத்துச் சாப்பிடுகிறார்கள்.
ஆனால் பிரியாணி எனும் இந்த உணவு வகை இந்தியாவிலும் பரிணமித்துள்ளது. பிரியாணி மொகலாயர்களுடன்தான் இந்தியாவிற்கு வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆனால், இது வளைகுடாவிற்கு சென்ற புனித பயணிகள் மற்றும் வீரர்கள், அரசு அதிகாரிகள் மூலம் தென்னிந்தியாவின் தக்காண பீடபூமிக்கு வந்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
கேரளாவிற்குச் சென்றால் அங்கே மலபார் மாப்ளா பிரியாணி பிரபலமானது. ஒரு காலத்தில் மீனும் இறாலும் இருந்த பிரியாணியில் கோழிக்கறியும், இறைச்சியும் இருக்கின்றன. அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் பிரியாணி ருசியுடன் சமைக்கப்படுகிறது.
அங்கு ஒரு காலத்தில் வந்த துரானி ஆப்கானியர்களோடு திரிபடைந்த பிரியாணியும் வந்திருக்கலாம். பின் வடக்கு உத்திரப்பிரதேசத்தில் மொரதாபாத் பிரியாணியும், டெல்லியில் ராஜஸ்தானில் பிரியாணி அந்த ஊரின் வாசனை பாணிக்கேற்ப மாறியுள்ளது.
கடைசியாக தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே எத்தனை வகை பிரியாணி உள்ளது. ஆம்பூர் பிரியாணி, செட்டி நாட்டு பிரியாணி, தலப்பா கட்டி பிரியாணி, மொகல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, மூங்கில் பிரியாணி, தம் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி என்று விதவிதமான பெயர்களின் பார்க்கலாம்.
இந்த ஆண்டு சர்வதேச பிரியாணி தினம் இன்று (ஜூலை 3 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அனைவரும் நிச்சயம் ருசிக்க வேண்டிய ஏழு வகை பிரியாணி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
காஷ்மீர் ஸ்டைல் பிரியாணி:
இந்த வகை பிரியாணி ஆனது நன்கு வேக வைக்கப்பட்ட ஆட்டுக் கறி, ரோஸ் கலரிங் சேர்க்கப்பட்ட அரிசி மற்றும் தாழம்பூ எசன்ஸ் சேர்க்கப்பட்டு காஷ்மீர் ஸ்டைல் பிரியாணி சமைக்கப்படுகிறது.
இதில் உள்ள ஆட்டுக் கறி சுவை, அரிசி மற்றும் மசாலா வாசம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
மட்டன் மந்தி பிரியாணி
இந்திய பண்டிகை காலங்களுக்கு பெயர் பெற்ற உணவு மந்தி பிரியாணி. மட்டன் மந்தி பிரியாணி சுவையை கூட்ட இதில் மட்டன் ஸ்டாக் எனப்படும்.
இவை வேக வைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இது மந்தி பிரியாணி சுவையை அலாதியாக்கி விடும்.
கொல்கத்தா சிக்கன் பிரியாணி
இந்த பிரியாணி விசேஷமான பெங்கால் பிரியாணி மாசாலா மற்றும் உருளைக் கிழங்குகளை கொண்டு பாரம்பரியம் மிக்க கொல்கத்தா ஸ்டைல் பிரியாணி சமைக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் பெங்கால் மசாலா அனைவருக்கும் பிடிக்கும்.
ஹைதரபாத் தம் பிரியாணி
இந்த வகை பிரியாணி அனைவரும் அறிந்து இருப்பர். உலகம் முழுக்க ஹைதராபாத் தம் பிரியாணி பிரியர்கள் உள்ளனர்.
இது உலகளவில் புகழ் பெற்ற உணவு வகை என்றும் கூறலாம். இதில் கோழி இறைச்சி பிரியாணி அண்டாவின் கீழ் பகுதியில் மட்டுமே இருக்கும். இதன் மீது அரிசி சாப்பாடு இருக்கும்.
மலபார் மீன் பிரியாணி
இந்த வகை பிரியாணி தென் பகுதி சுவை உங்களுக்கும் பிடிக்கும் என்றால், மலபார் மீன் பிரியாணியை நிச்சயம் ருசித்து பார்க்க வேண்டும்.
மலபார் மீன் பிரியாணி உடன் ரைத்தா வைத்துக் கொண்டு சாப்பிடும் போது அதன் சுவை தனிதான்.
கத்தல் பிரியாணி
கத்தல் பிரியாணி சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவு பிரியர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.
சீராக சமைக்கப்பட்ட கத்தல், மசாலா மற்றும் அரிசி இணைந்து இந்த பிரியாணியின் சுவையை தனித்துவம் மிக்கதாக மாற்றுகிறது.
வெஜ் தம் பிரியாணி
பல்வேறு காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுவது தான் வெஜ் பிரியாணி. சைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவாக வெஜ் தம் பிரியாணி உள்ளது.