இந்த 2 ராசிகள் ஒருபோதும் இணைந்திருக்கவே முடியாதாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் ஒவ்வொரு ராசிக்கு என்று சில தனித்துவமான குணங்கள் மற்றும் திறன்கள் நிச்சயம் இருக்கும். எனவே இந்த குணங்களுக்கு முறனாக குணம் கொண்டவர்களுடன் இந்த ராசியினரால் இணைந்திருக்க முடியாது.
அப்படி இரு துருவ குணங்களுடன் ஒருபோதும் இணையவே முடியாதளவுக்கு வேறுமைகள் கொண்ட ராசிகளின் கூட்டமைப்புகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் மற்றும் கடகம்
எப்படி நெருப்பையும் நீரையும் கலக்க முயற்சிப்பது முட்டாள் தனமோ, அதே போல் இந்த இரண்டு ராசியினரை இணைக்க நினைப்பதும் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும்.
மேஷமும் கடகமும் ஒன்றாக இருக்க நேர்ந்தால், பல்வேறு வகையிலும் நிச்சயம் சிக்கல்கள் ஏற்படும். நெருப்பு ராசியான மேஷம் அதன் தைரியமான மற்றும் தூண்டுதல் தன்மைக்கு பெயர் பெற்றது, அதே நேரத்தில் நீர் ராசியான கடகம் உணர்திறன் மற்றும் வளர்ப்பு தன்மை கொண்டது. அதனால் இவர்கள் கருத்துக்களால் இணைவது அசாத்தியம்
மேஷம் கடக ராசிக்காரர்கள் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பதாகவோ அல்லது உணர்ச்சிவசப்படுவதாகவோ உணரலாம், அதே நேரத்தில் கடகம் மேஷ ராசிக்காரர்களை உணர்ச்சியற்றவர்கள் அல்லது பொறுப்பற்றவர்கள் என நினைக்ககூடும். அந்த கூட்டமைப்பு ஒருபோதும் வெற்றியளிக்காது.
சிம்மம் மற்றும் விருச்சிகம்
நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேசுவதை விரும்பும் சிம்ம ராசியினர், ரகசியம் காப்பதற்கே பெயர் பெற்ற விருச்சிகத்துடன் இணைந்தால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.
சிம்மத்தின் கவனமும் போற்றுதலும் விருச்சிகத்தின் தீவிரமான மற்றும் தனிப்பட்ட இயல்புடன் மோதக்கூடும். இதனால் இவர்கள் இணைந்திருக்கும் இடத்தில் சிக்கல்களுக்கு பஞ்சமே இருக்காது.
இது ஒரு மர்மமான, திரைக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரியுடன் ஒரு மேடையைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு ஸ்பாட்லைட் போல் இவர்கள் இணைந்தால், வாழ்க்கையே போராட்ட களமாக மாறகூடும்.
ரிஷபம் மற்றும் மிதுனம்
பூமி ராசியான ரிஷபம் மற்றும் காற்று ராசியான மிதுனம், காற்றோடு நடனமாட முயற்சிக்கும் மரம் போன்றது. ஆரம்பத்தில் இந்த இரண்டு ராசிகளுக்கு இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தாலும், இவர்களாகலால் வாழ்ககை முழுவதும் நிச்சயம் இணைந்திருக்கவே முடியாது.
ரிஷபத்தில் பிறந்தவர்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்தும் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.ஆனால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகள் இவர்கள் ஒன்றாக சேர்ந்தால், யாரோ ஒருவர் மிகவும் பாதிக்கப்படபோவது உறுதி.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |