தோல்வியை அடியோடு வெறுக்கும் 3 ராசியினர் ... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாகவே ஆதிகம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் வெற்றியடைய வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களால் சிறிய தோல்வியை கூட தாங்கிக்கொள்ள முடியாது.

அப்படி வாழ்வில் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாத மனநிலையில் இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், அவர்களிடம் இயல்பாகவே போட்டித்தன்மை மற்றவர்களை விட சற்று அதிகமாக இருக்கும்.
இவர்களின் இந்த போட்டி குணம் காரணமாக தோல்வியை வெறுக்கிறார்கள், மேலும் தங்கள் இலக்குகளை அடைய வரம்புகளை மீறித் தங்களைத் தாங்களே தள்ளிக் கொள்ள இவர்களால் முடிகின்றது.
இவர்கள் வாழ்வில் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அதிக சக்தியுடனும் தைரியத்துடனும் விரைவாக மீண்டு வருவார்கள். காரணம் இவர்களால் தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு அமைதியாகத் தோன்றலாம், ஆனால் அவர்களின் இலக்குகளைப் பொருத்தமட்டில் மிகவும் தீவிரமாக போராடுகின்றார்கள். இவர்களுக்கு தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கும்.
அவர்கள் எளிதில் எந்த விடயத்தையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இவர்களின் பிடிவாதமான தன்மை, பெரும்பாலும் ஒரு குறைபாடாகக் கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் கடினமான காலங்களில் விடாமுயற்சியுடன் இருக்க அவர்களுக்கு உதவுவது தோல்வியை ஏற்க மறுக்கும் இவர்களின் பிடிவாதம் தான்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கதில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே எல்லா விடயங்களிலும் தாங்கள் தான் முதல் நிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
தோல்வி அவர்களின் பெருமை மற்றும் சுய பிம்பத்தை சவால் செய்வதால் அவர்கள் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கிக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் விழும்போது, அவர்கள் இன்னும் அதிக சக்தியுடன் உயர்வதற்கு அவர்களின் இந்த தோல்வி பயம் மிகப்பெரும் ஆற்றலாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        