அனைவராலும் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்ககை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிறிய பிரச்சினைகளை பெரிதாக மாற்றி மற்றவர்களை எரிச்சலூட்டும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்துக்கொள்வதால் இவர்களை பெரும்பாலானவர்கள் வெறுப்பதற்கு வாய்ப்பு அதிகம்.
இவர்கள் இயல்பாகவே இரட்டை ஆளுமை கொண்டவர்கள் என்பதால், அவர்களின் மனநிலை தொடர்ந்துமாறிக்கொண்டே இருக்கும், இது மற்றவர்களை குழப்பமடையச் செய்யும். இதனால் மற்றவர்கள் இவர்களின் நட்பு மற்றும் உறவை பெரிதாக விரும்புவது கிடையாது.
இவர்களின் அவசர குணத்தால் சிறிய பிரச்சினையை பெரிதாக மாற்றுவார்கள், இதன் விளைவாக வாக்குவாதங்கள் மற்றும் குழப்பநிலை ஏற்படகூடும். இவர்களின் இந்த குணங்களினால் மற்றவர்களின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துவிடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்ககளின் இந்த அடக்குமுறை பலருக்கும் பிடிப்பது கிடையாது.
இவர்களின் வலுவான தன்னம்பிகை காரணமாக இவர்கள் நடந்துக்கொள்ளும் முறை மற்றவர்கள் பார்வையில் இவர்களை திமிர்பிடித்தவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் காட்டுகின்றது
இவர்கள் தங்களின் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் அதிகமாக அக்கறை செலுத்துவதால், மற்றவர்களின் உணர்வுகள் குறித்து கண்டுக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் மற்றவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துபவர்களாவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் அன்புக்குரியவர்களை எப்போதும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு அதிகப்படியான உணர்திறன் இருப்பதால், அனைத்து விஷயங்களையும் பர்சனலாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்கள் பிடிக்காதவர்கள் மீது நீண்ட காலமாக வெறுப்பைக் மட்டுமே காட்டும் குணம் இவர்களிடம் இருக்கும்.
இவர்களின் அதீத பாசம் இவர்களை பொஸசிவனவர்களாக மாற்றும். அவர்களின் உணர்ச்சி கொந்தளிப்பால் உருவாகும் நச்சு சூழல் இவர்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாக அமைந்துவிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |