பாம்பு படையே நடுங்க வைக்கும் செடிகள்.. உங்க வீட்டில் இருக்கா?
உலகில் சுமாராக 2700 வகையான பாம்புகள் உள்ளன. அதில் தற்போது இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உயிர்வாழ்கின்றன.
இவற்றில், 20 சதவீதத்துக்கும் குறைவான பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவையாக இனங்காணப்பட்டுள்ளது. “பாம்பை கண்டாலே படையே நடுங்கும்..” என்பார்கள்.
அப்படி பார்ப்பவர்களை மிரட்டி ஓட விடும் அளவுக்கு பாம்பிடம் விஷத்தன்மையுள்ளது. பாம்பு கடித்தால் இறந்துவிடுவோமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டிலோ அல்லது தொட்டிகளிலோ சில சிறப்பு செடிகளை வளர்ந்தால் அந்த வாசனைக்கு பாம்பு காலநிலை மாற்றங்களின்போது வீட்டுக்குள் வராமல் தடுக்கலாம். அத்துடன் சிறுவர்கள் ஓடி விளையாடும் வசதி இருப்பவர்கள் இந்த செடிகளை கட்டாயம் வளர்க்க வேண்டும்.
அந்த வகையில், எந்த மாதிரியான செடிகள் வீடுகளில் வளர்ப்பதினால் பாம்புகள் வராமல் தடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சர்ப்பகந்தா மூலிகை செடி
சர்ப்பகந்தா மூலிகை செடியின் வாசனை மிகவும் விசித்திரமானவையாக இருக்கும். பாம்புகள் அதனை மணக்க ஆரம்பித்தவுடன் ஓடிவிடுகிறது. இயற்கையான பண்புகள் நிறைந்த இந்த செடியின் வேர்கள் பார்ப்பதற்கு மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் பாம்புகளால் செடி பக்கத்தில் கூட வர முடியாது.
புடலங்காய் செடி
புடலங்காய் செடியின் வாசனையை பாம்பகளால் நுகர முடியாது என நிபுணர்கள் கூறுகிறார்கள. ஏனெனின் பாம்புகளுக்கு இந்த வாசனை வந்தவுடன் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளும். இதனால் இந்த செடியை முற்றம், பால்கனி அல்லது பிரதான வாயிலிலும் நடலாம்.
சாமந்திப்பூ
மக்கள் தங்கள் வீடுகளில் மணம் மற்றும் அழகை அதிகரிக்க சாமந்தி பூக்களை நடுவார்கள். ஆனால் இதிலிருந்து வரும் வாசனையை பாம்புகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய சூழ்நிலையில், பாம்புகள் அதன் நறுமணத்திலிருந்து ஓடி விடுகிறது.
முள் கற்றாழை
முள் கற்றாழை செடி பாலைவனங்களில் காணப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, இது ஒரு அலங்கார செடியாகவே பார்க்கப்படுகிறது. முள் தன்மை காரணமாக, பாம்புகள் அதைச் சுற்றித் திரிவதை விரும்பாது. வீட்டு தோட்டங்களில் இதனை வளர்ப்பதால் பாம்பு பக்கமே வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |