உண்மை போல் பொய் சொல்லும் 3 ராசியினர்... இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், திருமணம் ,கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொற்று நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் உண்மையை போன்றே பொய் சொல்வதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

அப்படி பெய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் எல்லா விடயங்களுக்கு பொய் சொல்லும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அளவுக்கு ஒரு விடயத்தை மிகைப்படுதி சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் உணர்ச்சியற்ற தன்மையைக் கையாள முடியாதவர்களாக இருப்பதால், தங்கள் உணர்ச்சியற்ற அறிக்கைகளை மறைக்க அவர்கள் பொய் சொல்லும் குணத்தை உருவாக்கிக்கொள்கின்றார்கள்.
இவர்கள் முக்கிய தேவைக்காக மாத்திரமன்றி சிறிய விடயங்களுக்கும், அர்த்தமற்ற விடயங்களுக்கும் கூட பொய் சொல்ல தயங்குவது கிடையாது. இவர்கள் பத்து வார்த்தை பேசினால் ஐந்து வார்த்தை பொய்யாகத்தான் இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாகவும், தங்களின் கட்டுப்பாட்டில் எல்லாம் இருக்கவேண்டும் என்ற குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர்களாக இருப்பதால், தங்களின் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் அதிக பெய்களை சொல்கின்றார்கள்.
அதிக கவனத்தைப் பெற அல்லது அவர்கள் மீது வெளிச்சம் போட அவர்கள் பொய்களின் உதவியை நாடுகிறார்கள்.அவர்கள் சுயநலவாதிகளாக இருப்பதும் இவர்கள் அதிக பொய் சொல்லுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்லும் விடயத்தில் எது பொய், எது உண்மை என பிரித்தறிவது யாருக்கும் இயலாத காரியமாக இருக்கும்.
இவர்கள் எப்போதும் உண்மைகளுடன் கலந்தே அதிக பொய்களை சொல்வதால், இவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள்.
இவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உண்மையை மாற்றுவார்கள், ஏனெனில் அது அவர்களுக்கு மிகவும் எளிதானது. அவர்கள் மோதல்களைத் தவிர்க்க விரும்புவதும் இவர்களின் பொய்க்கு காரணமாகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |