டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்
பொதுவாக டீயுடன் பிஸ்கட், ரஸ்க், பஜ்ஜி, சமோசா போன்ற சிற்றுண்டிகளை சாப்பிட பலருக்கும் பிடிக்கும். சிலருக்கு பிரதான உணவை விட டீயுடன் சேர்த்து சாப்பிடும் தின்பண்டங்களில்தான் அதிக விருப்பம் இருக்கும்.
ஆனால், டீயுடன் பிஸ்கட், ரஸ்க் போன்ற சில உணவுகளை அடிக்கடி சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேநீரில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.ஆனால், அதனுடன் தவறான உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவது குறைவதுடன், செரிமான பிரச்சினைகளும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே, தேநீரின் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெற, அதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

டீயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை
இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள்: பயறு, பருப்பு மற்றும் அடர் பச்சை கீரைகளில் உள்ள இரும்புச்சத்தை தேநீரில் உள்ள டானின்கள் குறைவாக உறிஞ்சப்படச் செய்கின்றன. எனவே, இவ்வுணவுகளுடன் தேநீர் குடிப்பதை தவிர்த்து, உணவுக்கு 1–2 மணி நேரம் முன் அல்லது பின் குடிப்பது நல்லது.

சிட்ரஸ் பழங்கள்: தேநீருடன் சேர்த்து சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச் சாலட்கள் சாப்பிடுவது அமிலத்தன்மை மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். தேநீருக்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

வறுத்த மற்றும் கடலை மாவு உணவுகள்: பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் நிறைந்த நொறுக்குத்தீனிகள் தேநீருடன் சேரும்போது வயிறு உப்புசம் மற்றும் செரிமான சிரமத்தை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பால் அல்லது தயிர் பொருட்கள்: இவை தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயனை குறைத்து, சிலருக்கு செரிமானப் பிரச்சினையையும் உண்டாக்கலாம்.

காரமான அல்லது அதிக அமில உணவுகள்: இவை தேநீருடன் சேரும்போது அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கலாம். குறிப்பாக உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |