மெய் சிலிர்ப்பதற்கு என்ன காரணம்னு தெரியுமா? விலங்குகளுக்கும் இது ஏற்படுமா!
பொதுவாகவே அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது மெய் சிலிர்க்கும் உணர்வை நிச்சயம் அனுபவித்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா?
குறிப்பாக அதிகமான குளிர், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் மற்றும் வியப்பான விடயங்களை பார்க்கும் போது அல்லது கேட்கும் போது, இது போன்ற தருணங்களில் கை, கால்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் திடீரென எழுந்து நிற்கும்.
சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் குறித்த உணர்வை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது எதனால் ஏற்படுகின்றது என்பது தெரிந்திருக்காது. மெய் சிலிர்ப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
எதனால் நிகழ்கின்றது?
அறிவியவின் அடிப்படையில் புல்லரிப்பு ஏற்பட உணர்ச்சிகள்தான் முக்கியமான காரணமாக அமைகின்றது. பல உணர்ச்சிகள் இதனுடன் தொடர்புடையதாகும்.
குளிர் காலநிலை வெப்பநிலைகளுக்கு அப்பால், மெய் சிலிர்ப்பதற்கு பயம், அதிர்ச்சி, கோபம் அல்லது உற்சாகத்தின் தீவிரமான அல்லது திடீர் உணர்வுகள் நெருக்கம் மற்றும் பாலியல் தூண்டுதல் இசை, திரைப்படங்கள், தன்னியக்க உணர்வு மெரிடியன் பதில் (ASMR) அல்லது அதிகாரமளிக்கும் பேச்சு போன்ற வெளிப்புற தூண்டுதல்கள் போன்ற விடயங்கள் காரணமாக இருக்கும்.
இவ்வாறான சூழ்நிலைகளில் மயிர்க்கால்களுக்கு அடியில் சிறிய தசைகள் சுருங்கக் காரணமான நரம்புகள், மயிர்க்கால் ஸ்டெம் செல்களைத் தூண்டிவிடுவதால் இவ்வாறு மயிர்கள் சிலிர்கின்றன.
விலங்குகளுக்கு மெய்சிர்க்குமா?
மனிதர்களுக்கு மட்டுமன்றி சில விலங்குகளுக்கு மெய்சிர்க்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குளிர் காலநிலைகளில் ஒரு விலங்கின் ரோமங்களை தடிமனாக்குவதற்கு இவ்வாறு நிகழ்கின்றது.இதனால் குளிரில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
சில மிருகங்கள் எதிரிகளை உணர புல்லரிப்பது எதிரிகளின் வருகையை உணர்த்துவதாகவும் இருக்கிறது.இது அவற்றின் உயிரை காப்பாற்றும் ஒரு எச்சரிக்கை உணர்வாக இருக்கிறது.
சிம்பான்சி, எலி மற்றும் வேறு சிலவகை குரங்குகளுக்கு எதிரிகள் வரும் முன்னரே இந்த உணர்வு வந்துவிடும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
குறிப்பான பூனைகள் சண்டையிடும் போதும், பயத்தில் இருக்கும் போதும் அவற்றின் முடி தூக்கி கொண்டு நிற்கும். இதுவும் புல்லரிப்பதை போன்ற உணர்வுதான்.
ஆனால் மனித உடலில், மெய்சிலிப்பது அடிப்படை காரணம் வெப்பத்தைத் தக்கவைக்க உதவுவதைத் தாண்டி வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வெப்பநிலையில் திடீர் வீழ்ச்சி அல்லது குளிர்ச்சியை நாம் எதிர்கொள்ளும்போது, நமது மயிர்க்கால்களும் மேலே எழும்பி, நமது துளைகளை மூடி, நமது தோலின் மேற்பரப்பிற்கு அடியில் மீதமுள்ள உடல் வெப்பத்தைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
குளிர்ச்சியடையும் போது நாம் உணரக்கூடிய லேசான அசௌகரியம் காரணமாக மட்டுமல்லாமல், நமது உடலின் உகந்த செயல்பாட்டிற்கும் இது அவசியம் என்பதால் வெப்பத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |