நிலாவுக்கு நடுவில் தேவதையான பிரியங்கா.. குவியும் கமெண்ட்ஸ்
நிலாவுக்கு நடுவில் தேவதையான பிரியங்காவின் ரிசன்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
தேவதையான பிரியங்கா
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய காதல் கணவர் வசியுடன் லண்டனில் வசித்து வரும் பிரியங்கா, நிலாவுக்கு நடுவில் அமர்ந்து தேவதை போன்று போஸ் கொடுக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களுக்கு இணையவாசிகள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW