டபுள் எவிக்ஷன்.. அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபலங்கள்
பிக்பாஸ் சீசன் 9-ல் 6 வாரத்திற்கான எவிக்ஷனில் அதிரடியாக இரண்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் மற்றும் நடிப்பு அரக்கன் என கொண்டாடப்படும் திவாகர் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
டபுள் எவிக்ஷனா?
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனெனின் திவாகர் வெளியேறிய பின்னர், வீட்டிலுள்ளவர்கள் பற்றி யாரும் கேள்விப்படாத பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்படி, நேற்றைய தினம் பிரஜன்- விஜய் சேதுபதி இருவரின் வாதம் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றது. ஏனெனின் தொகுப்பாளரை போட்டியாளர் பிரஜன் பேசிய விதம் விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது.

வாக்குக்கள் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த வாரம் கெமி மற்றும் அமித் இருவரும் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். டபுள் எவிக்ஷன் என செய்திகள் வெளியாகிய வேளையில், யாரும் எதிர்பாராத வகையில் அமித்திற்கு பதிலாக பிரஜன் வெளியேற்றபட்டுள்ளார்.
காரில் திரும்ப பிரஜன் வருவார் என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்த்தாலும், வார இறுதியில் இப்படி நடந்து கொண்ட விதம் பிரஜனுக்கான ஆதரவை கொஞ்சம் குறைத்து விட்டது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |