விராட் கோலி மோசமாக விளையாடுவதற்கு இவர்கள் தான் காரணம் - முன்னாள் வீரரின் குற்றச்சாட்டு
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நேரத்தில், முன்னணி பேட்ஸ்மேன்களாக வலம் வரும் ரோகித், விராட் கோலி மோசமான ஃபார்மில் ரன் அடிக்க திணறி வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பல சாதனைகளை வைத்திருந்த விராட் கோலி கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் அவர் அதே ஃபார்மை ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி, கடந்த 2017 – 2021 வரை கேப்டனாக இருந்த அவர் அந்த பணிச்சுமை தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் முழுமையாக அனைத்துவித கேப்டன் பதவிகளுக்கும் முழுக்கு போட்டார்.
மரணத்தை முன் கூட்டியே கணித்து உயிரிழந்த நபர் - காரணம் என்ன?
பிசிசிஐ தான் காரணம்
ஆனால், அதன் பின்பு இனி ரன்களை குவிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் அதைவிட மோசமாக விளையாடி வருகிறார்.
மேலும், விராட் கோலியின் இந்த மோசமான பார்முக்கு அவர் கேப்டன்ஷிப் பதவி பறியோனதே காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கேப்டன் பதவி போனதுக்கு பின் தான் சோர்வாக இருக்கிறார். பீல்டிங் அசத்தும் கோலி மீண்டும் பேட்டிங் அசத்துவார் என கூறியுள்ளார்.
எனவே ரசிகர்களும் அவர் மீண்டு நிறைய ரன்களை குவிக்க வேண்டும் கோரிக்கை விடுகின்றனர்.