கண்ணோடு காண்பதெல்லாம்...தமிழில் வேற லெவலில் பாடிய பெண்! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
பயணங்களின் போது நாம் வழியில் பார்ப்போம். பலரும் நன்றாகவே பாடக்கூடியவர்கள்.
ஆனால் முறையாக சங்கீதம் கற்று இருக்காமல் இருப்பார்கள்.
இருந்தினும் அவர்கள் குரல் வளமும் சாரீரமும் பாடும்போது கொடுக்கும் சந்தன நயமும் வியக்க வைக்கும்.
அந்த வகையில் தற்போது ரயிலில் பாடல் பாடும் பெண் ஒருவரின் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
யாரென்று தெரியாத இந்த பெண் சுதி சுத்தமாக கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை பாடுவதாகவும், பாடலுக்கு ஏற்றாற் போல் இவர் போடும் தாளம் வியக்க வைப்பதாகவும் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, இணையதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் இவர் போன்ற திறமை மிக்கவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடியவர்கள் உதவினால் இவருடைய வாழ்க்கையே மாறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
