ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண விடயம் தான் சமீபகாரமான இணையத்தில் ட்ரெட்டிங்கில் இருக்கின்றது. இவர்களின் திருமணம் இன்று உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைபெறுகிறது. இதுகுறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா - விஜய் திருமணம்
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

அதனையடுத்து அவர்களுக்கு கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் திகதி திருமணமானது உதய்பூரில் வைத்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இரண்டு பேரும் சந்தோஷத்துடன் அதை உறுதி செய்யும் வகையில், திருமணத்துக்கு VIROSH திருமணம் என பெயர் வைத்திருந்தார்கள்.
இவர்களின் திருமணம் நடக்கும் மாளிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வாடகை என கூறப்படுகிறது.

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் செய்யவுள்ளனர். அதாவது ஒரே நாளில் 2 விதமான சடங்குகளுடன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலையில் தெலுங்கு பாரம்பரியப்படியும், மாலையில் கொடவா பாரம்பரியப்படியும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின், ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன் வருகிற மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெறும். இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்த வேண்டாம் என மணமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோக்களோ மூன்றாவது நபர்கள் மூலம் லீக்காகிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அந்த விதியை தங்களது திருமணத்தில் போட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |