ஹோலாஷ்டக காலம்: அடுத்த 8 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!
வேத சாஸ்த்திரங்களின் பிரகாரம் ஹோலி பண்டிகைக்கு முந்தைய 8 நாட்கள் ஹோலாஷ்டக காலம் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், ஹோலாஷ்டக காலம் பிப்ரவரி 24 ஆம் தினதி ஆரம்பமாகி 8 நாட்கள் நீடிக்கும் ஹோலாஷ்டக காலம் என்பது மிகவும் அசுபமானதாக பார்க்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் சுப காரியங்களை செய்ய மாட்டார்கள்.

காரணம் இந்த 8 நாட்களும் சனி, குரு, புதன், சுக்கிரன், ராகு, கேது, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் அசுபமான நிலையில் இருப்பதுடன் மிகவும் உக்கிரமாக இருக்கும்.
மேலும் இதன் போது ராகு மற்றும் செவ்வாய் கும்பத்தில் இணைந்து கொடூரமான அங்காரக யோகத்தை உருவாக்குகின்றது.

அதன் அசுப பலன்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை கொண்டிருந்தாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியினருக்கு ஹோலாஷ்டக காலம் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் புதிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இந்த 8 நாட்களும் மந்திர வேலைகள் செய்பவர்களுக்கு கைகொடுக்கும் என்பதால், மாந்திரீக விடயங்களில் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் பொறுமை அவசியம்.
சாலைகளில் செல்லும் போது கவனமாக செயல்பட வேண்டும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விபத்துகள் நேர அதிக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஹோலாஷ்டக காலத்தில் தங்களின் மனநிலையில் பாரிய மாற்றத்தை சந்திப்பார்கள். குறிப்பாக மன அழுத்தம் காரணமாக வாழ்க்கையின் மீதே விரக்தி ஏற்பட வாய்ப்புள்ளது.
இவர்கள் மனதை தெளிவுப்படுத்தும் தியானம் போன்ற பயிற்ச்சிகளில் ஈடுபடுவது சிறப்பு. இந்த காலகட்டத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்வா தவிர்க்க வேண்டும். சிறிய பிரச்சினைகள் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் எதிரிகள் அதிகமாவார்கள். உங்களின் எதிர்பாரத நடத்தை கூட வாழ்ககையை புரட்டி போட வாய்ப்புள்ளது என்பதால் இந்த காலகட்டத்தில் செயல்களில் மிகுந்த அவதானம் தேவை.
கும்பம்

கும்ப ராசியினருக்கு ஹோலாஷ்டக காலத்தில் ஆரோக்கிய பிரச்சினைகள் பெரிதாகும் அபாயம் காணப்படுகின்றது. இவர்கள் உணவு விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
தொழில் மற்றும் குடும் சூழலில் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவர்களுக்கு ஏழரை சனி நடப்பதோடு, அங்காரக யோகமும் உருவாவதால் தொழிலில் பாரிய பிரச்சினைகள் உருவாகும்.
மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும் என்பதால் யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.மன அழுத்த பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |