சுக்கிரனால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! 4 ராசிகளுக்கு சூப்பர் யோகமாம்
ஒவ்வொரு மாதமும் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதில் சுக்கிரன் கிரகமும் அடங்கும்.
ஜூலை 13 ஆம் தேதி, சுக்கிரன் புதனின் ராசியான மிதுனத்தில் பிரவேசிக்கும். ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சுக்கிரன் இந்த ராசியில் இருக்கும். இதன் பிறகு சுக்கிரன் கிரகம் கடக ராசிக்குள் நுழையும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அதன் பலன் 12 ராசிகளிலும் காணப்படும். இந்த கிரகம் செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் சின்னமாக இருக்கிறது. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்:
ஜோதிடத்தின் படி, சுக்கிரனின் ராசி மாற்றத்தால், அலுவலக வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். லாபத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இந்த ராசி மாற்றம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். அந்த பயணங்களின் மூலம் அனுகூலமான பல பலன்கள் கிடைக்கும். கூட்டு சேர்ந்து வேலை செய்தால் லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் பல சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்:
துலா ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் தெரியும். இந்த ராசி மக்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
மூதாதையர் சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற பல பெரிய வாய்ப்புகள் அமையும்.
தனுசு:
அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். கூட்டுப்பணிகள் செய்தால் லாபம் கிடைக்கும்.
பணியில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஊதிய உயர்வுக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
கும்பம்
ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அதே நேரத்தில், தொழிலில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும், இதனால் வளர்ச்சி அடைவீர்கள்.
இந்த காலத்தில் மேலதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறலாம்.
ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும், அதிக வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரது ஆதரவும் கிடைக்கும்.