இந்த விடயங்களுக்கு பணத்தை செலவு செய்தால் வறுமை உறுதி! எச்சரிக்கும் சாணக்கிய நீதி
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
சாணக்கியர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்த வகையான பழக்கங்கள் வறுமைக்கு காரணமாகும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மற்றவர்களை கவர்வதற்காக செலவு
மக்கள் பணக்கஷ்டத்திற்கு ஆளாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மற்றவர்கள் முன்னிலையில் ஆடம்பரமான தோற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மட்டும் விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் அல்லது ஆடைகளை வாங்குவது, அல்லது ஆடம்பரமான விழாக்களை நடத்துவது போன்றவை ஒருவரின் சேமிப்பை விரைவாகக் காலி செய்துவிடும்.
தற்காலிகமான சமூக அங்கீகாரத்தைத் தேடுவதை விட, நீண்ட கால நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது என்று சாணக்கியர் கூறுகிறார்.

தினசரி செலவுகளில் கவனம் இல்லாமை
பெரிய செலவுகளை கவனிக்கும் அளவிற்கு தினமும் செய்யும் சின்ன சின்ன செலவுகளில் மக்கள் கவனம் செலுத்துவதில்லை. எனவே காலப்போக்கில், இத்தகைய சிறிய செலவுகள் சேர்ந்து பெரிய தொகையாக மாறிவிடுகின்றன.
செலவுகளைக் கூர்ந்து கவனிக்காதபோது சேமிப்பு விரைவில் கரைந்துபோகும் என்று சாணக்கியர் கூறுகிறார்.தினசரி செலவுகளைக் கண்காணிப்பது, தேவையற்ற பண விரயத்தைத் தடுக்க உதவும். இல்லாவிடில் வறுமை ஏற்படுவதை தடுக்க முடியாது.

சம்பாதிக்கும் அனைத்தையும் செலவு செய்வது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு புத்திசாலி எப்போதும் தனது வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைப்பார்.
அவசரத் தேவைகள், மருத்துவச் செலவுகள் மற்றும் எதிர்பாராத சூழல்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே தனது வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது நிதி நிலைத்தன்மையை உருவாக்குவதோடு, கடன் அல்லது பிறரின் உதவியைச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்க்கவும் உதவுகிறது.

தேவையற்ற கடன்களை வாங்குவது
ஆடம்பரப் பொருட்கள் அல்லது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காகக் கடன் வாங்குவது ஒருவரை நீண்ட கால நிதி நெருக்கடியில் சிக்க வைக்கக்கூடும்.
தங்கள் வருமானத்திற்குள் வாழவும், பிற்காலத்தில் சுமையாக மாறக்கூடிய நிதிப் பொறுப்புகளைத் தவிர்க்கவும் சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
பொறுப்புடன் செலவு செய்வது ஒருவருக்கு வாழ்க்கையில் மன அமைதியையும், நிதிச் சுதந்திரத்தையும் அளிக்கிறது. இந்த விடயங்களில் கனமாக இல்லாதவர்களுக்கு நிச்சயம் பணத்துக்கு தட்டுப்பாடு இருந்துக்கொண்டே இருக்கும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |