நரைமுடியை முற்றாக கருப்பாக்கணுமா? தேங்காய் எண்ணெயில் இதை கலந்து பூசுங்க
தற்போது நரைமுடி பிரச்சனையால் பலரும் அவதிப்பட்ட வருகின்றனர். இதற்கு தேங்காய் எண்ணெயில் ஒரு பொருள் கலந்து போட்டால் பயனடையலாம்.
நரைமுடி
நரைமுடி என்றால் யாருக்கும் பிடிக்காது. நரைமுடி இருப்பது சிலரை தன்னம்பிக்கை இழக்கச்செய்யும். இது வயது வந்தோருக்கு வருவது சாதாரணம்.
ஆனால் சிறுவயதில் நரை முடி வருவது நம்மை அசாதாரணமாக உணரச்செய்யும். இதற்காக பலர் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த பொருட்கள் ஒரு குறுகிய காலம் மட்டுமே நமக்கு நன்மை தருவது போல ஏமாற்றும். ஆனால் இயற்கையில் கிடைக்கும் எந்த பொருட்களும் இதுபோன்ற தீங்கை தருவதில்லை.
எனவே இந்த பதிவில் இளநரைமுடிக்கு தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டிய பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

எதை கலக்க வேண்டும்?
தேங்காய் ஓடுகள் நரை முடியை கருமையாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் ஓடுகளை ஒரு வாணலியில் சூடாக்கி பொடியாக அரைக்கவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவினால் அது கருமையாக மாறும். ஒரு மணி நேரம் கழித்து உங்கள் தலைமுடியைக் கழுவவும்.
தேங்காய் ஓடு பொடியை ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். அதை மஞ்சளுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இது வீக்கத்தைக் குறைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |