செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா!
நடிகை த்ரிஷா தன் செல்ல மகள் இஸ்ஸியை செம கியூட்டாக அழங்கரித்து, ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை தக்கவைத்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவருக்கென ஒரு ரசிகர் படையே காணப்படுகின்றது.

தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் த்ரிவின் பெயரும் படுமோசமாக பாதிக்கப்ட்டாலும், எதையும் கொஞ்சமும் பொருட்படுத்தாது தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.

த்ரிஷாவின் ரசிகர்களுக்கு தெரியும் இவர் ஒரு நாய் பிரியை. வளர்ப்பு நாயை செல்லப்பிராணியாக மாத்திரம் பார்க்காமல் பெற்ற பிள்ளையை போல் பராமரித்து வருவகின்றார் த்ரிஷா.

ஏற்கனவே த்ரிஷா பாசமாக வளர்த்து வந்த Zorro எனும் நாய்குட்டி உயிரிழந்த போது கூட த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் உருக்கமாக என் மகன் இறந்துவிட்டான் என்று தான் பதிவிட்டிருந்தார்.

Zorroவின் இறப்பின் பின்னர் அந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத த்ரிஷா தனது இஸ்ஸி என்ற பெண் நாயை வாங்கி வளர்த்து வருகின்றார். அதனை த்ரிஷா பல இடங்களிவல் தன் மகள் என பதிவு செய்திருக்கின்றார்.

இந்நிலையில், தன் செல்ல மகள் இஸ்ஸியை செம கியூட்டாக அழங்கரித்தது, ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |