இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி
நடிகர் விஜயுடன் த்ரிஷைாவை தொடர்பு படுத்தி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு த்ரிஸா மௌனமாக இருப்பது பற்றி வேலையமைப்பு பேச்சாளர் பேசி உள்ளார்.
சங்கீதா விவாகரத்து
சுமார் 27 ஆண்டுகாலம் விஜயுடன் செர்ந்திருந்த மனைவி சங்கீதா தன்னுடைய மணவாழ்க்கை முடித்துக்கொள்ள விவாகரத்து கேட்டுள்ளார். இந்த விடயம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் பரவ இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தவிர இது சினிமாவிலும் அரசியலிலும் தாக்கத்தை உண்டாக்கியதால் சமூக வலைத்தள பக்கத்தில் வலைபேச்சு பிஸ்மி இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

வலைபேச்சு பிஸ்மி
தற்போது விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு வலைபேச்சாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும் போது விஜயிடம் இருந்து சங்கீதா நடிகையுடன் தொடர்பு என்று சொல்லி விவாகரத்து கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ங்கீதா விவாகரத்து மனுவில் 2021 ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார். அனால் உண்டை அது இல்லை.
விஜய் மற்றும் சங்கீதா இருவரும் 2017ம் ஆண்டிலிருந்தே பிரிந்து தான் வாழ்கின்றனர். இந்த விடயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக இசை வெளியீட்டு விழா, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.
'மாஸ்டர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் கலந்து கொண்டார்கள். சொல்லபோனால் விஜய்யை விட்டு சங்கீதா பிரிந்ததன் பின்னரே சங்கீதா குறிப்பிட்டிருக்கும் அந்த நடிகையுடன் தொடர்பு வந்திருக்கிறது போல தெரிகிறது.

த்ரிஷா மௌனம் காப்பது ஏன்?
விஜய் சங்கீதா பிரிவை கண்டு சமூக வலைத்தளங்களில் விஜய்க்கும் த்ரிஷா பற்றியும் சேர்த்து வைத்து செய்திகள் பரவி வந்தபோது த்ரிஷா மொனமாக தான் இருந்தார்.
ஆனால், நயினார் நாகேந்திரன் த்ரிஷாவையும் விஜய்யையும் இணைந்து பேசியதும் த்ரிஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ஆனால் இந்த விவாகரத்து விஷயத்தில் த்ரிஷா அமைதியாக இருக்க காரணம் விஜயின் மனைவி எந்த இடத்திலும் த்ரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை.
எனக்கு விஜய் மூலம் அழுத்தம் வந்தால் மட்டுமே நான் விஜய் பெயரை குறிப்பிடுவேன் என சங்கீதா கூறி இருக்கிறார். அதனால் தான் த்ரிஷா மொனம் காக்கிறார்.

த்ரிஷா விஜய் செய்த தவறு
விஜய் த்ரிஷாவிற்குள் என்ன உறவு வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நாம் ஆராந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமூக வைலத்தளங்களில் தப்பான கருத்துக்கள் பரவும் போது த்ரிஷா ஏன் அந்த போட்டோவை வெளியிட வேண்டும்.
இந்த விடயத்தில் த்ரிஷத செய்தது பெரிய தவறு. இந்த மாதிரியான சர்ச்சை நேரங்களில் போட்டோ போட்டால் பிரச்சனை வரும் என்பது நன்றாக தெரிந்தும் த்ரிஷா செய்தது தவறு.
இதில் விஜய் செய்த தவறு என்ன தான் த்ரிஷா தோழியாக இருந்தாலும் த்ரிஷா போட்டோவை பகிர முதல் விஜய் அதை தடுத்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.
விஜய், சங்கீதா இடையே பெரிய பிளவு வந்து இருக்காது என வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |