சூரியன் சனி சேர்க்கை: கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் யார் தெரியுமா?
சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் மார்ச் மாதம் 'யுதி திருஷ்டி யோகம்' உருவாகிறது. இந்த யோகம் பல நாட்களுக்கு இருக்கும். இதனால் சில ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட போகின்றனர்.
'யுதி திருஷ்டி யோகம்'
ஜோதிடத்தில் 'யுதி திருஷ்டி யோகம்' சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த யோகம் சனி மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் சில ராசிகளில் சுப மற்றும் அசுப தாக்கத்தை உண்டாக்கும்.
ஜோதிடத்தி பல கிரகப்பெயர்ச்சிகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் பல பலன்கள் உண்டு. அந்த பலன்களின் அடிப்படையில் ராசிகளின் எதிர்காலத்தை பற்றி கணிக்கின்றனர் ஜோதிடர்கள்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மார்ச் 25, 2026 அன்று மதியம் 2:22 மணிக்கு, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கர்ம நாயகன் சனியும் இந்த யுதி திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் தரித்திரத்தில் சிக்கப்போகின்றனர்.

மேஷம்
- மார்ச் 25, 2026-ல் உருவாகும் சூரியன் சனி சேர்க்கையால் மேஷ ராசி கஷ்டங்களை அனுபவிக்கும்.
- நீங்கள் அவசரப்பட்டு வணிக முடிவுகள் எடுத்தால் அது தோல்வியில் தான் முடியும்.
- காதல் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் அதிக பிரச்சனை வரும்.
- உங்கள் துணை உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
- இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
- பொருத்தமான துணை கிடைக்காது.
துலாம்
- மார்ச் 25, 2026-ல் உருவாகும் சூரியன் சனி சேர்க்கை உங்கள் ராசிக்கு பல கெடுதலை கொண்டு வரும்.
- தொழில் செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய நேரிடும்.
- நிதி நிலையில் இழப்பை சந்திப்பீர்கள்.
- புதிய சொத்துக்கள் வாங்குவதை இந்த கால கட்டத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும்.
- திருமணமானவர்கள் துணையின் கடந்த கால ரகசியத்தை அறிவார்கள்.
- இது நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கலாம்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
- நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் பல விளைவுகளை சந்திப்பீர்கள்.
- உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
- மார்ச் இறுதியில் நிதிநிலை சரியும்.
- இந்தக் காலகட்டத்தில் கடுமையான கண் பிரச்சனை வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).