இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவே பர்பெக்ட்டான அப்பாவா இருப்பார்களாம்... ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு முன்னர் எப்படி இருந்தாலும், ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னர் மிகவும் பொறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்களாம்.

அப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதில் பர்பெக்ட்டான தந்தையாக அறியப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மற்றும் அக்கறையுள்ள ராசியாகும். சந்திரனால் ஆளப்படும் கடக அப்பாக்கள் ஆழ்ந்த பாதுகாப்பைக் கொண்டவர்கள் மற்றும் எப்போதும் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சி நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் தங்களின் குழந்தைகளுக்காக தங்களின் ஆசைகளையும், தேவைகளையும் கூட விட்டுக்கொடுக்கும் அளவுக்கு தியாக உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தனது குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதை ரசிக்கிறார்கள்.குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷபம் என்பது சுக்கிரனால் ஆளப்படும் ஒரு ராசியாகும், மேலும் இது நிலைத்தன்மை மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்றது.
ரிஷப ராசி அப்பாக்கள் நம்பகமானவர்கள், நடைமுறைக்கு ஏற்றவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகயை நிறைவேற்ற தங்களை வருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள்.
இவர்கள் குழந்தைகளிக் விடயத்தில் பொறுமையானவர்களாகவும், வார்த்தைகளால் அன்பை அதிகமாக வெளிப்படுத்தாமல் அவரது செயல்களால் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துவார்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகள் மீது மிகுந்த பெருமை கொண்ட தந்தையர்களாக இருப்பார்க்கள். குழந்தைகளின் சிரிப்பில் ஆறுதலடையும் குணம் இவர்களிடம் இருக்கும்.
சூரியனால் ஆளப்படும் இந்த ராசிக்காரர் தாராளமான பாதுகாப்பு மற்றும் அன்பான இதயம் கொண்டவர். இவர்கள் குழந்தைகளை பொறுப்புள்ள தலைவர்களாக மாற்றுவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், தங்கள் வெற்றிகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் ஊக்குவிக்கிறார்கள். இந்த ராசி ஆண்கள் வளர்பில் வளர்ந்தவர்கள் சிறந்த மனிதர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |