விவாகரத்திற்கு காரணம் என்ன? ரச்சிதாவின் வெளிப்படையான பதில்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புடவை அணிந்து புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகை ரச்சிதா
கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா. பல தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை ரக்ஷ்தா காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ரச்சிதா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் மக்களிடையே பிரபலமானார்.
வெள்ளித்திரையிலும் அசத்திவரும் ரச்சிதா, விவாகரத்திற்கு பின்பு புதிய கார், வீடு என வாங்கிய ரச்சிதா பெங்களூரில் செட்டிலாகியுள்ளார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரச்சிதா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

ரச்சிதாவின் பதில்
ரச்சிதா மகிழ்ச்சியாக இருப்பதற்காகவும், சுதந்திரமாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக கணவரை விவாகரத்து செய்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ரச்சிதா, என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன். எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது.

ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும்.
இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |