நெய்யுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் போதும்! ஆண்களுக்கு அருமருந்தாகுமாம்!
திப்பிலி ஆனது பல மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இவை, தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
அடுத்து, திப்பிலிப்பொடியையும் கடுக்காய்ப்பொடியையும் சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலையும் , மாலையும் என தொடர்ந்து இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கும்.
ஆண்மை குறைபாடு நீங்கும்..
மேலும், திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும். தொடர்ந்து, திப்பிலி பொடி 1 பங்கும் 2 பங்கு வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும்.
நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். அடுத்து, முக்கியமாக, சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். சுக்கின் மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும், பிறகு மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் மட்டும் ப்ரோக்கோலி சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
அதன்பிறகு, ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமாகும், இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்
