சுக்கிரன் பெயர்ச்சியால் மூன்று ராசியினருக்கு ராஜயோகம்! உங்க ராசியும் இதில் இருக்குதா?
சுக்கிரன் பெயர்ச்சி இன்னும் சில தினங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி 9 கிரகங்களும் தங்களது ராசியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொள்கின்றது. இவ்வாறு மாற்றிக் கொள்ளும் போது 12 ராசிகளுக்கும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது.
அதிலும் பிப்ரவரி மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெற உள்ள நிலையில், அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வருகின்றது.
அந்த வகையில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நடைபெறுகின்றது. இதனால் செல்வம் புகழ் வெற்றி கிடைக்கின்றது.
சில ராசிகளுக்கு நன்மையும் கிடைக்கின்றது. பிப்ரவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடைகின்றார். மேலும் செவ்வாய் பிப்ரவரி மாதம் 23ம் தேதி திங்கள்கிழமை கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
குறித்த கிரகங்கள் இணையும் போது செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகி ராசிகளுக்கு நன்மையும் அளிக்கின்து. அவை எந்தெந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையினால் மிதுன ராசியினருக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்.
சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் முடியும் நிலையில், குடும்பத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவினை மதிக்கவும் செய்வார்கள்.
தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாவதுடன், செல்வ செழிப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும் இந்த மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
நிதி தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வரும் நிலையில், வாகனம் வாங்கும் வாய்ப்பும், தொழிலில் போதுமான லாபத்தையும் பெறலாம்.

விருச்சிகம்
செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையினால் விருச்சிக ராசியினருக்கு முன்னேற்றம் ஏற்படும். பணம் மற்றும் சொத்து விடயத்தில் சாதகமான முடிவும் எடுக்கப்படும்.
வாழ்க்கையில் எதிர்பார்த்த மகிழ்ச்சி நிலைத்திருப்பதுடன், வியாபாரத்தில் முன்னேற்றத்தையும், நிதி நிலைமையும் அதிகரிக்கவும் செய்யும்.
பணியிடத்திலும் நல்லதொரு அங்கீகாரம் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகளும், பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கம் நிலையில், வாகனம், நகை, வீடு வாங்குவதற்கு வாய்ப்பும், தொழில் தொடங்க வாய்ப்பும் உள்ளது.

மகரம்
மகர ராசியினருக்கு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையினால் அதிகமான நன்மையை பெறுாவர்கள். இந்த தருணத்தில் சம்பளம் உயர்வு மட்டுமின்றி எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
உங்களது வாழ்க்கையில் நிலவிய நிதி சிக்கல்கள் தீருவதுடன், திருமண தடயும் விலகி, விரைவில் நல்ல வரன் அமையவும் வாய்ப்புள்ளது.
இந்த காலத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனை முடிவிற்கு வருவதுடன், காதல் திருமணமும் செய்ய வாய்ப்புள்ளது. குழந்தைகள் வழியே நற்செய்தியும் உங்களைத் தேடி வரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |