உங்க வீட்டு ஃபிரிட்ஜில் இந்த பொருட்கள் இருக்கின்றதா? உடனே தூக்கி போட்ருங்க
ப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்தும், அது ஏற்படத்தும் தீங்கைக் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான வீடுகளில் தங்களது நேரத்தினை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக ப்ரிட்ஜில் அதிகமான உணவுகளை பதப்படுத்தி வைக்கின்றனர்.
இவ்வாறு பதப்படுத்தி வைக்கும் உணவுகள் உடம்புக்கு கெடுதலை ஏற்படுத்துகின்றது. மேலும் ப்ரிட்ஜில் சரியாக ஸ்டோர் செய்யாத பொருட்கள் விரைவில் கெட்டுப்போய்விடும்.
இதனை நாம் தெரியாமல் சாப்பிட்டால் அது உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்திவிடும்.
ப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள்
கலாவதியான மசாலாப் பொருட்களை ப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஒருமுறை திறக்கப்பட்ட கெட்ச்அப், மயோனைஸ், கடுகு, சோயா சாஸ் போன்ற பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கெட்டுப் போய்விடும். பாக்டீரியா வளர்ந்ததை நாம் கவனிக்காமல் சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படும்.
சமைத்த உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் 3 நாட்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். பின்பு பாக்டீரியா வளரத் தொடங்கி விஷமாக மாறிவிடும். ஒருமுறை சமைத்த உணவை 3 நாட்களுக்கு மேல் ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
அழுகிய காய்கறிகள், பழங்கள் உடனே குளிர்சாதனப்பெட்டியில் இருந்து அகற்றவும். பூஞ்சை பிடித்த பழங்கள் தர்நாற்றம் வீசுவதுடன், மற்ற உணவுகளையும் பாதித்துவிடும்.
பால், தயிர், பன்னீர், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் எளிதில் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. காலாவதியாகிய பின்பு உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்படும். அவற்றின் காலாவதி தேதியை பார்த்து பயன்படுத்தவும்.
பச்சை இறைச்சி மற்றும் கடல் உணவுகள் அவற்றின் நிறம் மாறினாலோ, புளிப்பு வாசனை வீசினாலோ அது கெட்டுப்போய்விட்டதாக அர்த்தம். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும், சமைக்காத இறைச்சி குளிர்சாதனப் பெட்டியில் 1-2 நாட்களுக்கு மட்டுமே வைப்பது நல்லது.
திறந்து வைக்கப்பட்ட ஜாம் மற்றும் ஊறுகாய் இவற்றினை நீண்ட காலம் ப்ரிட்ஜில் வைத்தால், அதில் பூஞ்சை அல்லது நிறமாற்றம் ஏற்பட்டுவிடும். இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தெரியாமல் சாப்பிடும் போது உடல்நல பிரச்சனை ஏற்படும்.
காலாவதியான முட்டைகளை உட்கொள்வது சால்மோனெல்லா போன்ற பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். ஆகவே கெட்டுப்போன முட்டையை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. தண்ணீரில் போட்டு சோதனை செய்த பின்பு பயன்படுத்தவும். தண்ணீரில் மிதந்தால் காலாவதியான முட்டை என்று அர்த்தம்.
பயன்படுத்தப்படாத மருந்துகளை ப்ரிட்ஜில் சேமித்து வைத்தால், அவற்றின் வீரியத்தை குறைத்துவிடும். ஆகவே கெட்டுப்போன மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
புளித்த அல்லது துர்நாற்றம் வீசும் சட்னிகள் வீட்டில் தயாரிக்கப்பட்ட சட்னி மற்றும் தோசை மாவு இவற்றினை ப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பூஞ்சை வளர்ச்சியடைந்து மற்ற உணவு பொருட்களையும் கெட்டுப்போக வைத்துவிடும். மேலும் ஆரோக்கியத்திற்கும் கேடு ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
