Tourism: கொல்லிமலை போக ஆசையா? அப்போ இந்த விடயம் தெரியாமல் போகாதீங்க!
இந்தியா, தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்த கொல்லிமலை பற்றி திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதனை சிலருக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அப்படியானவர்கள் கீழுள்ள பதிவில் உங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
இந்த மலையான 1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ளது. 280 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட அடர்த்தியான காடுகள் நிறைந்த மலை பகுதியாக உள்ளது. இதன் உயரம், சிகரம் 4663 அடி கொண்டது.
வரலாற்று சான்றுகள்
இவ்வளவு பிரமாண்டமாக இருப்பதால் சிலர் இந்த மலையை “வேட்டைக்காரன் மலை” என்றும் கூறுகிறார்கள். உயிரினங்களை கொல்லும் சூர் பழங்குடியினர் வாழ்ந்த காரணத்தால் கொல்லிமலை என அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக உள்ளது. கொல்லிமலை என பெயர்க் கொண்ட இந்த மலையை சிலர் மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கிறார்கள். ஏனெனின் சிலப்பதிகாரத்தில் மணிமேகலையின் புறநானூறில் கொல்லிமலை பற்றிய பதிவுகள் அதிகமாக இருக்கிறது.
இந்தப் பகுதியை முற்காலத்தில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான ஓரி என்பவர் ஆட்சி செய்து வந்ததாகவும், காட்டில் வாழ்ந்த சிங்கம், புலி, கரடி, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
ராமாயண காலத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்த மலைப்பகுதி என புராணம் கூறுகிறது. ஔவையார், பெருஞ்சித்திரனார் போன்ற புலவர்கள் இந்த மலையை பற்றி பல பாடல்கள் பாடியுள்ளனர்.
பிற்காலத்தில் சேர மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறும் உள்ளது. கொல்லிமலையில் அமைந்திருக்கும் பெண் தெய்வம் கொல்லிபாவை என அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர்.
காட்டில் உள்ள கோயில்கள்
இதனை தொடர்ந்து ஆகாய கங்கை, நீர்வீழ்ச்சி அறநூறு அடி உயரத்திலிருந்து விழுகிறது. இம்மலை உச்சியில் அரபள்ளீஸ்வரர் கோவில் உள்ளது.
மேலும், இங்கு புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகன் வேடன் கோலத்தில் காட்சி தருகிறார். இந்த மலையில் சிறிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அங்கு தினசரி படகு சவாரி நடைபெற்று வருகிறது.
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் வல்வில் ஓரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆகாய கங்கை பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக உள்ளது. பலவிதமான காப்பி தோட்டங்களும் பழத்தோட்டங்களும் நிறைந்துள்ளன. இங்கு செம்மேட்டில் சீக்கு பாறை சேலூர் கோயிலூர் போன்ற வியூ பாயிண்ட்டுகள் சிறப்பாக உள்ளன.
சீக்கு பாறையில் இருந்து பார்த்தால் 70 கொண்டை ஊசி வளைவுகளையும் அருமையாக இருக்கும். போகர் மற்றும் அகஸ்தியர் வசித்த குகைகள் அடர்ந்த காட்டு பகுதிகளுக்குள் உள்ளன.
படகு சவாரி
வாசலூர் பட்டி என்ற இடத்தில் படகு இல்லம் என்று ஒன்று உள்ளது. அங்கு நாம் படகு சவாரி செய்யலாம். காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரை படகு சவாரி செல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கொல்லி பாகை எட்டுக்கை அம்மன் கோவில் மற்ற கோயில்களை விட சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே போன்று கொல்லிமலையில் தேன் பிரபலமாக உள்ளது. அங்கு வாழும் குடிமக்கள் கொல்லிமலை சந்தையே வைத்திருக்கிறார்கள்.
காட்டுக்குள் உள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை சாமான்கள், தேன், காப்பி மற்றும் மருந்து சாமான்கள் எந்தவித புரோக்கர் இல்லாமல் வியாபாரம் செய்யப்படுகின்றன.
தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் மாறியுள்ளது. நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கொல்லிமலை ராசிபுரம் - தம்மம்பட்டி - சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்தில் செல்லும் வசதி உள்ளது. மலைப்பாதை நீளம் 26 கிலோமீட்டர் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பழங்குடி மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |