இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தன்னுடைய துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம். அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 1
எண் கணிதத்தின்படி, 12 மாதங்களில் 1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டம் காரணியாக சூரியன் பார்க்கப்படுவதால் எப்போதும் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வார்கள்.
அதே போன்று எண் 1 உள்ளவர்கள் சுதந்திரத்தை அதிகமாக விரும்புவார்கள். ஒருவரின் கீழ் வேலை செய்வதை விட சொந்த தொழில் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். அவர்களுக்கு ஒரு தலைமைத்துவ திறன் உள்ளது. இவர்கள் இயற்கையான தலைவர்கள், எந்த அணிக்கும் வழிகாட்டுதல் அளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் தைரியம் மற்றும் அச்சமின்மை இரண்டின் அற்புதமான கலவை இருக்கும்.
எண் 1 உள்ளவர்கள் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க பாடுப்படுவார்கள். ஒருவருக்கு கீழ் வேலை செய்யும் பொழுது நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். புதியதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செய்வதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
வணிகம், அரசியல், நிர்வாகம் மற்றும் படைப்புத் துறைகளில் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் ஆபத்துகள் வராமல் இருப்பதற்கு புதிய யோசனைகளை முன்வைப்பார்கள். தொழில்முனைவோர் துறையில் வெற்றி பெறுகிறார்கள். யாரையும் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக தங்கள் சொந்த பலத்தில் முன்னேறுவதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்க்ள. வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் நகர ஆரம்பிப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).