பாபா வாங்கா கணிப்பின் படி வாழ்க்கையில் ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?
பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு ஜெயிக்கிற குதிரையாக ஓடப்போகும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார். அதில் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள் அடங்குவார்.
அந்த வகையில் பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் வாழ்க்கையே மாறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கையே மாறப்போகும் ராசிக்காரர்கள்
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த வருடம் வாழ்வில் பல மாற்றங்களை காண்பார்கள். எவ்வளவு அதிகமாக மாறுகிறதோ, அவ்வளவு கவனிக்கக்கூடியதாக இருக்கும். இந்த ஆண்டில் பிறந்தவர்கள் மனதில் நல்ல விடயங்கள் அதிகமாக இருக்கும். பெரிய மாற்றங்களை காண்பார்கள். நம்பிக்கையுடன் வாழும் இவர்களுக்கு சிறந்த வருடமாக அமையும். புதிய மாற்றங்கள் அதிகமாக இருக்கும். |
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு படைப்பாற்றல் மிக்கவையாக இருக்கும். வெற்றி பல காண வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் செல்லும் பாதையில் செல்ல விரும்பமாட்டார்கள். உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு வெற்றி அதிகமாக இருப்பதால் இன்னும் உயரத்திற்கு செல்வார்கள். |
ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யும் துறையில் செழிப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும். வருமானத்தில் உயர்வு கிடைக்கும். புத்திசாலித்தனமாக யோசித்து முதலீடு செய்தால், எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியிலான பலன்கள் அதிகமாக இருக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).