அற்புதமான தாய்மை குணத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
இவ்வுலகில் அனைத்து பந்தங்களையும் விட மேலான பந்தம் என்றால் அது நிச்சயம் தாய் சேய் உறவாகத்ததான் இருக்கும். தாய்மை இந்தளவுக்கு போற்றத்தக்கதாக இருப்பதற்கு காரணம் தாய்மையில் துளியளவும் சுயநலம் இருக்காது.
தாய்மையே சிறப்பு தான் என்றாலும், ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் உலகில் தலைசிறந்த தாயாக மாறுவார்களாம்.
அப்படி குணங்களின் பிரகாரம் அற்புதமான தாயாக திகழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்யினர் இயற்கையாகவே அமைதியானவர்களாகவும், குழந்தை வளர்ப்பில் தனித்துவமான ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் முன்னிலையில் யாரையும் பாதுகாப்பாக உணர வைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால், அவர்களின் குழந்தைகள் எதையும் எளிதாக நம்பவும் அவர்களிடம் சொல்லவும் முடியும்.
இவர்கள் குழந்தைகளிடம் தாயாக மட்டும் இல்லாமல் சிறந்த நன்பியாகவும் இருப்பார்கள்.இவர்களிடம் எந்த விடயத்தையும் தயக்கமின்றி பகிர்ந்துக்கொள்ள முடிகின்றது. இவர்கள் குழந்தைகளுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
கடகம்
கடகம் ராசியில் பிறப்பெடுத்த பெண்கள் மென்மை மற்றும் உணர்திறனுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய் சிங்கங்களை போல் நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் இயல்பாகவே தங்களின் குழந்தைகளில் ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக தங்களின் விருப்பங்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.
இவர்கள் குழந்தைகள் விடையத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். குழந்தைகளின் நலனுக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்த்து போராடுவார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் தாய்மைக்கு தலைசிறந்த உதாரணமாக இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலம் செம்மையாக இருக்க இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
இவர்களின் வளர்பில் வளரும் குழந்தைகள் யாராலும் சாதிக்க முடியாத விடயங்களை சாதிக்கும் வல்லமை பெற்றவர்களாக மாறுவார்கள். இவர்கள் நேர்மை மற்றும் ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள்.
எல்லைகளின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு கற்பிப்பதிலும் அவர்கள் சிறந்தவர்கள், எனவே அவர்களின் குழந்தைகள் எப்போதும் பொறுப்பானவர்களாகவும், சமூகத்திற்கு சிறந்த மனிதர்களாகவும் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |