உயிருக்கு போராடிய குரங்குக்கு உயிர்கொடுத்த நபர் - காண்போரை கண்கலங்க வைக்கு காட்சி!
உயிருக்கு போராடிய குரங்கு ஒன்றை நபர் ஒருவர் உயிர் கொடுத்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்து இருக்கிறது.
இன்றைய அவசர காலக்கட்டத்தில், விலங்கினங்கள் நீருக்காகவும், உணவுக்காகவும் படும் அவஸ்தயை காணும் போது கண்கள் குழமாகிறது. இவர்களுக்கு உதவ ஒரு சில மனிதர்கள் முன் வந்தாலும், பலரும் தனக்கான வேலையை பார்த்துகொண்டு சென்றுக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இதனிடையே, நாய் கடித்ததில் ரோட்டு ஓரத்தில் குரங்கு ஒன்று மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற 38 வயதான பெரம்பலூர் மாவட்டம் ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்பவர் கார், குரங்கின் நெஞ்சை அழுத்தி அதன் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்.
அந்த குரங்கு எழும்பாத நிலையில் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சைக் கொடுக்கிறார். அதன் பிறகு குரங்கு எழுகிறது. பின்னர் குரங்கு உயிர் பிழைத்ததை கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
உடனே குரங்கை அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குரங்கை வனத்துறையிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.
பலரும் அந்த நபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் இதுபோன்ற நற்செயல்களை அனைவருக்கும் வரவேண்டும், விலங்கினங்களுக்கு நாம் அன்பை பொழிந்து உணவுகளை வழங்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.