மகளை பறிகொடுத்த சோகத்தில் யாருக்கும் தெரியாமல் பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!
விஜய் டிவி பிரபலங்களான படவா கோபி- ஹரிதா தம்பதி 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்து வருகின்றனர்.
மேடை நாடக கலைஞரான படவா கோபியை விஜய் டிவி நிகழ்ச்சியில் அடிக்கடி பார்க்கலாம்.
இவர் தனது மனைவி ஹரிதாவுடன் விஜய் டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 1, மிஸ்டர் & மிஸ்ஸஸ், நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
மிமிக்ரி மன்னனான படவா கோபி, தோனி போல் பேசி காட்டுவதில் வல்லவர். இவர் காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக சினிமாவில் கலக்கி வருகிறார். இது தவிர இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
5 வயதில் மகளை இழந்த சோகம்
படவா கோபி - ஹரிதாவின் செல்ல மகள் கடந்த 2007ஆம் ஆண்டு மறைந்தார்.
5 வயதில் மகளின் இறப்பு இருவரையும் புரட்டி போட்டது. மீளா துயரத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டனர்.
ஆனாலும் அவர்களால் தங்களின் செல்ல மகளை மறக்க முடியவில்லை. இந்த விஷயம் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் தெரியும்.
அதுமட்டுமில்லை, ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கோபி இதை வருத்ததுடன் பகிர்ந்து இருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு கோபியும் ஹரிதாவும் செய்து வரும் உன்னதமான சேவை பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
இவர்கள் மறைந்த தங்களது குழந்தையின் நினைவாக ட்ரஸ்ட் ஒன்று தொடங்கி அதன் மூலம் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.
அவர்களான செலவை இவர்கள் பார்த்து கொள்கிறார்கள். இவர்களின் இந்த உன்னதமான சேவை நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த தகவல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.