அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் பெண்ணின் குரல்.. தமிழா தமிழாவில் கதறி அழுத பெண்
அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய பெண்ணின் அழுகை தமிழா தமிழா அரங்கையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழா தமிழா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அரங்கத்தில் கண்கலங்கிய பெண்
இந்த நிலையில், ஆண்கள்- பெண்கள் வீட்டில் எப்படி பாசத்தை காட்டுவார்கள் என்பதனை கருவாகக் கொண்டு கடந்த வாரங்களில் ஒரு வாதம் நடந்து முடிந்துள்ளது. அதில், இரண்டு பெண் குழந்தைகளின் தாயான ஒரு பெண்,“ என்னுடைய அப்பா என்னை இதுவரையில் கொஞ்சியது கிடையாது.
மாறாக அவர், என்னுடைய குழந்தைகளையும் கொஞ்சியது இல்லை. வீட்டிற்கு சென்றால் பார்ப்பார். அதனுடன் அவர் இருந்து விடுவார். அப்பாவின் பாசத்தை நான் அவ்வளவாக உணர்ந்தது இல்லை..” என பேசியிருக்கிறார். இதனை கேட்ட ஆவுடையப்பன் சற்று கவலையடைந்துள்ளார்.
இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா? என கேட்கும் வகையில், அவருடைய கேள்விகள் கேள்விகள் அமைந்தன. தன்னுடைய கணவரிடமும் அடிக்கடி இதனை கூறியிருப்பதாகவும், அந்த பெண் அரங்கத்தில் கூறியிருந்தார்.
இப்படியாக எபிசோட் காணொளிகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |