Tamilzha Tamizha: மனைவி அனுபவித்த மாமியார் கொடுமை! அரங்கத்தில் நபரை எச்சரித்த நடுவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ நினைப்பவர்கள் மற்றும் தனிக்குடித்தனம் செல்ல நினைப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் ஒரே குடும்பத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ நினைப்பவர்கள் மற்றும் தனிக்குடித்தனம் செல்ல நினைப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
கூட்டுக்குடும்பத்தில் மாமியார் இருக்கும் நிலையை குறித்து மருமகள்கள் அரங்கத்தில் உடைத்துள்ளனர்.
மற்றொரு மருமகள் தான் கர்ப்பமாக இருந்த போதும், குழந்தையை பார்க்கக்கூறிய போதும் பேசிய வார்த்தைகளை அரங்கத்தில் கூறியுள்ளார்.
இதனால் கொந்தளித்த நடுவர் குறித்த கணவரிடம் தனிக்குடித்தனம் வைப்பது சரி என்று கோபப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |