9 மாதங்களின் பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்... வைரலாகும் நடிகர் மாதவனின் நெகிழ்ச்சி பதிவு
நடிகர் மாதவன் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியுள்மை குறித்து வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியாக பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூழ்நிலை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் உடன் அவரது குழுவும் விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
சுமார் 17 மணி நேர பயணத்திற்கு பின்பு இவர்கள் பாதுகாப்பாக பூமியை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது.
டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஹூஸ்டன் விண்வெளி மையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.
இருவரின் உடலும் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளன. விண்வெளி மையத்தில் இருந்தபோது உடல் எடையற்றதைப் போன்று இருந்திருக்கும்.
தசை உள்ளிட்ட உறுப்புகள் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப சீராக செயல்பட குறிப்பிட்டளவான நேரம் எடுக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
நடிகர் மாதவனின் நெகிழ்ச்சி பதிவு 9 மாதங்களுக்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளதை உலக மக்கள் அனைவருமே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
திரையுலக பிரபலங்களும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் நடிகர் மாதவன் சுனிதா வில்லியம்ஸ் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
