வறட்டு இருலை ஓட விடும் சுக்கு மல்லி காபி
சளி, இருமல் தொல்லை உள்ளவர்களுக்கு ஏற்ற சுக்கு மல்லி காபியை எப்படி போடுவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்
- மிளகு
- காபிதூள்
- சீரகம்
- ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- சுக்கு - ஒரு துண்டு,
- கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.
செய்முறை
துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.
இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம்.
விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.