மூக்கை மட்டும் மறைக்கும் வித்தியாசமான மாஸ்க்! எதற்காக தெரியுமா?
கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி இருக்கும் வேலையில், தடுப்பூசிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.
வைரஸால் ஆரம்ப காலக்கட்டங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற சூழல் நாடுமுழுவதும் நிலவி வந்தது. அந்த வகையில், மாஸ்க் அணிவதை பல விதமாகவும், மேலும் மாஸ்க்கையே பல விதமாகவும் பல வண்ணங்களிலும் அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில், ன்கொரியா. அங்குள்ள சியோல் பகுதியில் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மையுடைய மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை தென்கொரியாவின் அட்மின் என்ற நிறுவனம்தான் இந்த புதிய வடிவம் மாஸ்க்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாஸ்க் அணிவதால் சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் மாஸ்க்கை கழற்ற வேண்டும் என்பதால் அந்த சிரமத்தை குறைக்கும் வகையில் மூக்கை மட்டும் மறைக்கும் மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தப் புதிய வகை மாட்டிற்கு தென்கொரியாவில் கோஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர்.