இன்று கோடியில் புரளும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் முதல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
சிவகார்த்திகேயன் எப்போதுமே பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினர் ரசிகர்களையும் கவரும் விதமாகவே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதேபோல் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஏனென்றால் இவரது படங்களில் முகம் சுளிக்கும் விதமாக எந்தவொரு காட்சிகளும் இருக்காது. அதேபோல் சிவகார்த்திகேயன் சிகரெட் மற்றும் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க மாட்டார்.
இதனால் தானோ என்னவோ தற்போது சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்து அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ஆனால் இவர் ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறியுள்ளார்.
தனது திறமை மற்றும் விடா முயற்சியால் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது நடிகராக இருந்தாலும் அவரது திரைப்பயணம் ஒரு தொகுப்பாளராகவே தொடங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது மற்றும் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார்.
காமெடி கலந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிவகார்த்திகேயனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தொகுப்பாளராக இருந்த சமயத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில், விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் ஆரம்ப கால கட்டங்களில் ரூ. 2000 சம்பளமாக வாங்கி கொண்டு வேலை செய்து வந்துள்ளாராம்.
தற்போது கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் இவ்வளவு குறைவான சம்பளத்திற்கு பணிபுரிந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.