காட்டு விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் சிவகார்த்திகேயன்
காட்டு விலங்குகளை செல்லபிராணியாக நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாளும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதாக நடிகர் விஜய் ஒரு மேடையில் பேசியிருப்பார்.
சிங்கம், யானையை தத்தெடுத்த சிவா
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கம் மற்றும் பெண் யானையை தத்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், விஷ்ணு என்ற ஆண் சிங்கம் மற்றும் ப்ரக்ரிதி என்ற பெண் யானையை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உணவுகளை தினமும் வழங்கி வருகிறாராம். அதில் “ஹான் அணு” என அழைக்கப்படுகின்ற பெண் புலியை கடந்த 2018 – 2020 வரை தத்தெடுத்திருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


