Siragadikka Aasai: மீனாவை விட்டுப் பிரிந்த முத்து... கதையில் எதிர்பாராத திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் திருமணத்திற்கு ஒருவழியாக முத்து வந்துள்ள நிலையில், இனி மீனாவை தனது வீட்டிற்கு வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை கொடுமை படுத்தி வருகின்றார்.
சீதா அருணின் திருமணத்திற்கு வரமறுத்த முத்துவை கடைசியாக திருமணத்திற்கு வரவழைத்துள்ளார்.
திருமணத்திற்கு வந்த முத்து இனி தனக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி மீனாவை விட்டு பிரிந்துள்ளார்.
மீனா மற்றும் முத்துவின் பிரிவு நிரந்தரமாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |