Siragadikka Aasai: ரோகினிக்கு விஜயா செய்யும் கொடுமை! கண்டுகொள்ளாத மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தனது கட்டுப்பாட்டிற்குள் மனோஜை வைத்துள்ள நிலையில், ரோகினி மனம் கஷ்டப்பட்டு அறைக்குள் அழுது கொண்டிருக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்துள்ளது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது பயங்கரமாக கொடுமைபடுத்துகின்றார்.
இதுவரை விஜயாவின் கொடுமையை மீனா மட்டும் அனுபவித்து வந்த நிலையில், தற்போது ரோகினியும் அனுபவித்து வருகின்றார்.
ரோகினியை மனோஜுடம் எங்கும் செல்லக்கூடாது என்று உறுதியாக விஜயா கூறியுள்ள நிலையில், மனோஜ் மாடியில் சென்று படுக்க போன போது, விஜயா தடுத்து அறைக்குள் சென்று தூங்க கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |