Siragadikka Aasai: காய்ச்சலால் கஷ்டப்பட்ட மனோஜ்! விழுந்து விழுந்து கவனித்த ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், ரோகினி அவருக்கு மருந்து கொடுத்து பார்த்துக் கொள்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைத்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் மலேசியா மாமா உண்மை பூதாகரமாக வெடித்தது.
பணக்கார மருமகள் என்று ரோகினியை கொண்டாடி வந்த விஜயா, தற்போது மனோஜிடம் நெருங்க கூட விடாமல் கொடுமை செய்கின்றார்.
தற்போது மனோஜிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், ரோகினி அவரை கவனித்து வருகின்றார். இந்நிலையில் விஜயா கடுப்பில் ரோகினியை சத்தம் போடுகின்றார்.
மனோஜிடம் எதற்காக காய்ச்சல் வந்தது என்று கேட்டதற்கு, ரோகினியிடம் பேசாமல் இருப்பதால் தான் என்று பதில் அளித்துள்ளார். உடனே விஜயா கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |