சிங்கிள் பசங்க லைட்டிலை தட்டி தூக்கிய கூமாபட்டி தங்கபாண்டி! குவியும் லைக்குகள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சியின் Grand Finale நேற்றைய தினம் 21 ஆம் திகதி பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பானது.
இந்நிலையில், சிங்கிள் பசங்க லைட்டில் வின்னராக கூமாபட்டி தங்கபாண்டி அறிவிக்கப்ப்பட்டார். அத்துடன் ராவணன் ரன்னர் ஆக தெரிவுசெய்யப்பட்டார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது லைக்குகளையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.

சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. புதிய பாணியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது என்றால் மிகையாகாது.
மணிமேகலை தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றிருந்தார்கள்.

இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் இவர்களுக்க ஜோடியாக பல சீரியல் பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிநடைப்போட்டு மக்களின் பேராதரவுடன் நேற்றைய தினம் முடிவுக்கு வந்த இந்த நிகழ்ச்சியின் லைட்டிலை கூமாபட்டி தங்கப்பாண்டி தட்டிதூக்கியுள்ளார்.

மேலும் பெருமளவான பெண் ரசிகர்களை கவர்ந்த ராவணன் இந்நிகழ்ச்சியின் ரன்னர் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது சிங்கிள் பசங்க Grand Finale புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |