singapenne: கோபத்தின் உச்சியில் மகேஷ்.. திக்குமுக்காடும் அன்பு- ஆனந்தி
ஆனந்தி கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணம் என நினைத்த மகேஷ் வீட்டிற்கே சென்று அடித்து, “இனி கல்யாணம் பண்ணி பாருடா..” என மிரட்டல் விடுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார் என தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போகிறார்.
ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அவரின் அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதன் பின்னர், ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
அன்புக்கும் துளசிக்கும் திருமணம் பேசி முடிவாகி அதன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனம் உடைந்து போன ஆனந்தி அவரின் வாழ்க்கையில் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் யாருக்கு ஆனந்தி கர்ப்பம் தெரியக் கூடாது என பயந்தார்களோ, அதே போன்று ஆனந்தி கர்ப்பம் மகேஷிற்கு தெரியவந்து விட்டது.
நியாயம் கேட்டு போராடும் மகேஷ்
இந்த நிலையில், கடும் கோபமடைந்த மகேஷ் அன்பு வீட்டிற்கு சென்று அடித்து சண்டை போடுகிறார். அப்போது ஆனந்தியும் அன்புவும் மறைந்து ஒரே அறையில் வாழ்ந்து வந்த விடயத்தையும் குடும்பத்தினர் பார்க்க போட்டு உடைக்கிறார்.
இவற்றையெல்லாம் அன்புவின் மொத்த குடும்பமும் ஒன்றாக இருந்து கேட்கிறார்.
அதன் பின்னர், “ நீ இப்படி பண்ணுவன்னு எனக்கு தெரியாது. ஆனந்தியை ஏமாற்றி விட்டு துளிசியை கல்யாணம் பண்ண போறீயா?” என கேட்டதுடன் அன்பு- துளசி திருமணம் இனி நடக்காது என்றும் கூறுகிறார்.
இதனை தொடர்ந்து உண்மையை தெரிந்து கொண்டு ஆனந்தியின் கர்ப்பத்திற்கு பதில் மகேஷ் பதில் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
