வாயுத் தொல்லையா? நெஞ்சு சளியா? உங்களுக்கான எளிய பாட்டி வைத்தியம்
உங்களுக்கான எளிய பாட்டி வைத்தியம் இதோ,
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 இலவங்கம், சேர்த்து நன்று அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆரவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒருநாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்து தூளாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயு தொல்லை நீங்கும், ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும், மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
குறிப்பு- உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும்.