நடிகர் பிரபாகரன் மரணம்- தூங்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்
நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் காலமானார்.
நடிகர் பிரபாகரன்
பனி விழும் மலர் வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன்.
இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.
சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வந்த பிரபாகரன், கடந்த ஏப்ரல் 10ம் தேதி சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு வந்ததும், இரவு உறங்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
காலமானார்
இந்த நிலையில், குடும்பத்தினர் பிரபாகரனை பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள் நடிகர் பிரபாகரன் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். திடீர் மாரடைப்பால் இவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது.
இவருக்கு தற்போது வயது 62. மறைந்த நடிகர் பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10வது படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இவருடைய மரணம் சின்னத்திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதுடன் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |