விரைவில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்? கசிந்த முக்கிய தகவல்
பிரபல தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி.
கடந்த 5 ஆண்டுகளாக 1200 எபிசோட்களை கடந்து வெற்றிநடைப் போட்டு வருகிறது செம்பருத்தி.
இந்த சீரியலில் ஆதியாக கார்த்திக் ராஜும், பார்வதியாக ஷபானாவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர்
பின்னர் செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் விலக, தொகுப்பாளர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.
முதலில் தடுமாற்றம் அடைந்தாலும், நாளுக்கு நாள் தன்னுடைய நடிப்புத்திறனை மேம்படுத்திக் கொண்டார் அக்னி.
மூன்று முறை திருமணம்
சீரியலின் தொடக்கத்தில் அகிலாண்டேஸ்வரி நடத்தும் கம்பெனியின் விளம்பரத்துக்காக ஆதி பார்வதி கழுத்தில் தாலி கட்டுவார்.
அதன்பின்னர் இருவருக்கும் காதல் மலர, தன் வீட்டில் வேலை செய்யும் பார்வதியை, அகிலாண்டேஸ்வரிக்கு தெரியாமல் ஆதி திருமணம் செய்து கொள்வார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆதி- பார்வதி திருமண எபிசோடை மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டரை மணி நேர நிகழ்வாக ஒளிபரப்பினர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அகிலாண்டேஸ்வரியின் சம்மதத்துடன் இருவருக்கும் மூன்றாவது முறையாக திருமணம் நடந்நது.
விரைவில் சுபம்
பல திருப்பங்கள் இருந்தாலும் சமீபகாலமாக சீரியலில் சுவாரசியமில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.
கொரோனா காலத்திலும் கூட எந்த தடையும் இல்லாமல் சீரியல் ஒளிபரப்பான நிலையில், டிஆர்பி குறைந்து வருவதாக தெரிகிறது.
இதற்கு மேலும் கதையை இழுக்க வேண்டாம் என ரசிகர்களும் தொடர்ந்து கமெண்ட் அடிக்க விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம் என சீரியல் குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எனவே கூடிய விரைவில் ”சுபம்” போட்டுவிட்டு மூன்று புதிய சீரியல்களை களமிறக்க முடிவு செய்துள்ளதாம் சேனல் நிர்வாகம்.
மோசமான நிலையில் இருக்கிறாரா ஸ்ருதிஹாசன்? அவரே வெளியிட்ட உண்மை