புதன் பெயர்ச்சியால் ஏற்படும் கோடீஸ்வர யோகம்... இதுல உங்க ராசியும் இருக்குதா?
மே மாதத்தில் நடைபெறும் புதன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் தனது பாதையை மாற்ற போகின்றார். வழக்கமான பாதையிலிருந்து வடக்கு அல்லது தெற்கு நோய்கி நகரும் போது, புதன் கிராந்தி விருத்த பரிவர்த்தன் என்று அழைப்பார்கள்.
மே மாதம் 13ம் தேதி இரவு 11.27 மணிக்கு வடக்கு நோக்கி நகர்கின்றார். இந்த நேரத்தில் 4 ராசியினர்கள் அதிர்ஷ்டத்தினை பெற போகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் புதனின் இந்த மாற்றத்தினால் நல்ல பலனை அடைவதுடன், குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், பழைய நண்பர்களை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.
தொழிலில் புதிய வாய்ப்புகளை காண்பதுடன், தன்னம்பிக்கை அதிகரித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமான பலனை அளிப்பதுடன், வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்குமாம்.
பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள். புதிய ஆற்றலுடன், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதால் சிக்கல்கள் தீரும்.
கன்னி
புதன் வடதிசை நோக்கி நகர்வதால் கன்னி ராசியினருக்கு மங்களகரமானதாக அமைவதுடன், வெற்றியை நோக்கி முன்னேறுவார்கள்.
தனது திட்டங்களை செயல்படுத்த இது நல்ல நேரமாக இருக்கின்றது. கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், ஆரோக்கியம் மேம்படுகின்றது. வேலையும் சிறப்பாகவே இருக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு புதனின் திசை மாற்றம் நல்லதொரு முன்னேற்றத்தினை அளிப்பதுடன், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம், கடின உழைப்பிற்கு நிச்சயம் பல கிடைக்கும்.
நிதி நிலை உயர்வதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. இந்த ராசியினர் தங்களது இலக்குகளை அடைவற்கு அதிகம் செயல்படுவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |