30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- புதன்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நிச்சயம்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்களின் நிலைகளானது ராசிபலன் கணிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார். சனிபகவான் நாம் செய்யும் கரும வினைகளுக்கு ஏற்ப அதாவது, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் பாராது கொடுத்துவிடுவார்.

அதுபோல் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான் அறிவாற்றல், தகவல் தொடர்பு மற்றும் கல்வி ஆகியவற்றின் காரணியாக திகழ்கின்றார். இந்த இரண்டு கிரகங்களின் அரிய சேர்க்கையானது மீன ராசியில் நிகழவுள்ளது.
30 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் 11 ஆம் திகதி சனி மற்றும் புதன் இணையவதால், அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்வில் மகத்தான சாதக மாற்றங்கள் நிகழப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் உச்ச பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் குறித்த சனி -புதன் சேர்க்கை நிகழ்வதால், இவர்களின் நீண்டகால கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். குறிப்பாக சனியின் ஆசியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதனின் நிலையால் இவர்களின் சிந்தனையில் தெளிவு பிறக்கும். புதிய திட்டங்கள் வெற்றியளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு கிடைக்கும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் பேராடி வந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில் கூடி வரும். எதிர்பாரத வகையில் பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழ்வதால் இவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக தொழில் ரீதியில் இதுவரையில் இல்லாத வளர்ச்சி ஏற்படும்.
இந்த ராசியினருக்கு போனஸ் பணம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். சனி கொடுக்க முடிவு செய்துவிட்டால் நிச்சயம் அதை கொடுத்தே தீருவார் எனவே ஏதோ ஒரு வழியில் பணவரவு கிடைக்கும்.
புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் காணப்படுகின்றது.தொழில் ரீதியில் நீண்டகாலமாக இருந்த குழப்ப நிலை நீங்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி புதன் சேர்க்கை நிகழவுள்ளது. அதாவது இந்த ராசியில் சனி லாப ஸ்தானத்தில் அமர்வதால் இவர்களின் நிதி வளர்ச்சியை ஏப்ரல் முதல் வாரத்துக்கு பின்னர் யாராலும் தடுக்கவே முடியாது.
வருமானத்தில் எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் புதிய வழிகளில் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.
நீண்டகாலமாக இருந்துவந்த கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீ்ர்கள். கொடுத்த கடன்கள் சரியான நேரத்தில் வட்டியுடன் திரும்ப கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலகட்டம் ரிஷபத்துக்கு பொற்காலமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |