Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா?
சரிகமப வில் 5 முதலாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவான இறுதிச்சுற்றுக்கு சுஷாந்திக்கா தன்னை தயார்ப்படுத்தி வரும் நிலையில், சாதாரணமாக மேடையில் பாடிய மார்கழி திங்கள் அல்லவா... பாடலையே Finale பர்பாமன்ஸ் போல் கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale இன்று 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதில் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக சுஷாந்திக்கா ஸ்ரீஹரி, சபேஷன் , சின்னு செந்தமிழன், ஷிவானி மற்றும் பவித்ரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க முடியாத விடயமாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் சாதாரணமாக பாடும் போதே Finale பர்பாமன்ஸ் போல் கொடுக்கும் சுஷாந்திக்காவின் மார்கழி திங்கள் அல்லவா... Fire performance இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு காணப்படுகின்றமை குறிபிடத்தக்கது. இன்று இவர் தான் வெற்றி மகுடத்தை சூடுவார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |