உக்ரைன் மீது போரை நிறுத்து.. ரஷ்யாவுக்கு தங்க இறக்குமதி செய்ய தடை: அமெரிக்க அதிபர் ஜோ படைன் அதிரடி!
மாஸ்கோவின் மீது உள்ள பொருளாதார தடையை இறுக்க ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என உக்ரை மீதான போரை ரஷ்யா தொடர்ந்து தொடுத்து வருகிறது.
இதனால் பல பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனிடையில், ரஷ்ய மீதான தங்கம் இறக்குமதியை ஜி 7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் 26ம் தேதி 28-ம் தேதிவரை நடக்கிறது.
இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் பல விவாதங்கள் முன் வைக்கப்பட்டது.
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால் அது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
உலக சந்தையில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து, ஜோ பைடன் தெரிவிக்கையில், ரஷ்யாவிற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதித்து கொடுக்கிறது தங்க ஏற்றுமதி.
எனவே ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தின் இறக்குமதியை நாங்கள் தடைசெய்வோம் என்று G7 ஒன்றாக அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.
The United States has imposed unprecedented costs on Putin to deny him the revenue he needs to fund his war against Ukraine.
— President Biden (@POTUS) June 26, 2022
Together, the G7 will announce that we will ban the import of Russian gold, a major export that rakes in tens of billions of dollars for Russia.